6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டக் கையேடு
பகுதி - வரலாறு
அலகு 2.1மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்கும் முறை : தானே கற்றல்
கற்றல் திறன்கள்
படித்தல், எழுதுதல், அடிக்கோடு இடல், மனவரைபடம், வரலாறு அறிதல்
அறிமுகம்
ஆதிமனிதனின் வாழ்க்கை வரலாற்று முறையினைக் கூறி அறிமுகம் செய்தல்
படித்தல்
மாணவர்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதியை தனித்தனியாக படித்து முடித்து முக்கிய மற்றும் கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடல்.
அந்த வார்த்தைக்கான விளங்கங்களை ஆசிரியரிடம் கேட்டல்.
மனவரைபடம் :
தொகுத்தல்
நிமிர்ந்து தலை மற்றும் இரு கால்களை பயன்படுத்தி நடப்பது. கட்டை விரலில் ஏற்பட்ட மாற்றங்கள்.
மூளையின் வளர்ச்சி போன்றவற்றால் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் மரம், குகை, மலையடிவாரத்தில் தங்கினர்.
கல்லை கூர்மையாக்கி, செதுக்கி அதனையே ஆயுதமாக பயன்படுத்தினர்.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் தொகுத்து, வழங்குதல் வேண்டும். மாணவ கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைப்படத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
1. பரிணாமம் என்றால் என்ன ?
2. ஆதிமனிதன் எந்தெந்த விலங்குகளை வேட்டையாடினான்?
குறைதீர் கற்றல்
> புரியாத பாணவர்களுக்கும். சில கடினப் பகுதிகளுக்கும் காணொளி,PPT, SLIDESHOW மூலம் பாடப் பொருளை விளக்குதல்.
எழுதுதல்
நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு
விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல், பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
0 Comments