பாடத்திட்டக் கையேடு - வரலாறு
வகுப்பு - 6
அலகு :4 - தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்கும் முறை : குழுக்கற்றல்
ஒருங்கமைப்பு : முழுப்பாடம்
கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், கேள்வி கேட்டல்
அறிமுகம்
> தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் பற்றிக் கூறுதல்.
தற்பொழுது உள்ள பெரும் நகரமான சென்னை, மும்பை, டெல்லி ஆகியவற்றை கூறி அறிமுகம் செய்தல்
படித்தல்
> ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படி கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
மனவரைபடம்
தொகுத்தல்
> பூம்புகார் : இதற்கு காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரும் உண்டு சோழர்களின் துறைமுகம் பூம்புகார். சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்கள் மூலம் இதன் சிறப்பை அரியலாம்.
- மதுரை : மிகப்பழமையான நகரம். ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இங்கு இருந்துள்ளது.
காஞ்சி : சமணப் பள்ளிகளும், புத்த பள்ளிகளும் இருந்தன காஞ்சி “கோயில்களின் நகரம்” எனவும், காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
வலுவூட்டல்
> ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மன வரைபடம், தொகுத்தல், வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை. கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
1. சங்கம் வளர்த்த நகரம்
2. கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்
3. தூங்காநகரம் என மதுரையை அழைப்பது ஏன்?
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
எழுதுதல் மற்றும் தொடர் பணி
> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான படங்கள், நாணயம், ஒலைச்சுவடி, பழங்காலப் பொருட்களை சேகரிக்க செல்லுதல்.
0 Comments