அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 History Unit-3 Part-1 Notes of Lesson

வரலாறு - பாடத்திட்டக் கையேடு

வகுப்பு -7

அலகு 3.1 தென் இந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை


அலகின் ஒருங்கமைப்பு

: i) சோழர்கள் ஆட்சியின் புத்தெழுச்சி

ii) சோழப் பேரரசின் சரிவு

iii) நிர்வாக முறை iv) உள்ளாட்சி நிர்வாகம்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

vi) வருவாய்

vii) நிலம் சார்ந்த உறவுகளை

அடிப்படையாகக் கொண்ட

viii) சமூக அமைப்பு

ix) நீர்ப்பாசனம்

x) மதம்

xi) கோவில்கள்

xii) கல்விப் பணி மற்றும் வணிகம்

கற்றல் திறன்கள்

- வாசித்தல், விவாதித்தல், வரைதல், உரைத்தல், நடித்தல், எழுதுதல்.

ஆயத்தப்படுத்துதல்

தமிழ் நாட்டில் ஆட்சி செய்த யார் ? கல்லணையைக் கட்டியது யார் ?

தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில் பெயர் என்ன? போன்ற கேள்விகளைக் கேட்டு ஆயத்தப் படுத்தல்.

வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்

மாணவர்களைப் பாடத்தை நன்கு வாசிக்கச் சொல்லுதல். பின்னர் முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடி சொல்லுதல், பின்னர் மாணவர்களைக் குழுவாக அமர்ந்து விவரித்து அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டல்

மனவரைபடம்





தொகுத்தல்

நிர்வாக முறை:

சோழர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கி இருந்தனர். நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகவும், மண்டலம் நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.

உள்ளாட்சி நிர்வாகம்:

உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் என்னும் அமைப்புகளின் மூலம் செயல்பட்டது. ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

இன்றைய காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமம். இக்கிராமத்தில் கிராம சபைக்கான உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை கல்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன.

வலுவூட்டல்

Q.R. Code மூலம் கற்பித்தல்.
குழு செயல்பாடுகள் கொடுத்தல். மனவரைபடத்தை மீண்டும் விளக்கம் கொடுத்தல்.

மதிப்பீடு

உத்திரமேரூர் பற்றி கூறுக ?

காணிக் கடன் பற்றி விளக்குக. சதுர்வேதி மங்கலம் பற்றி கூறுக.

குறைதீர் கற்றல்

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கும், சில கழனப் பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்.

எழுதுதல்

பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதிவரச் சொல்லுதல்.

தொடர்பணி

பாடத்தோடு தொடர்புடைய வரலாற்றுச் சின்னங்களின் படங்களை சேகரித்து ஒட்டிவரச் சொல்லுதல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts